சிறுமையில் மாட்சி!
இறை வாக்கு: யோவான் 12:27-28.
27. இப்பொழுது என் ஆத்துமா கலங்குகிறது, நான் என்ன சொல்லுவேன். பிதாவே, இந்த வேளையினின்று என்னை இரட்சியும் என்று சொல்வேனோ; ஆகிலும், இதற்காகவே இந்த வேளைக்குள் வந்தேன்.28. பிதாவே, உமது நாமத்தை மகிமைப்படுத்தும் என்றார். அப்பொழுது: மகிமைப்படுத்தினேன், இன்னமும் மகிமைப்படுத்துவேன் என்கிற சத்தம் வானத்திலிருந்து உண்டாயிற்று.
இறை வாழ்வு:
சிறுமையில் பெருமை வருமோ என்பார்,
சிலுவையின் மாட்சி காணாதார்.
பொறுமையில் இயேசு பெற்றுத் தந்தார்;
புரிந்து வாழ்வார் நாணாதார்.
அருமை வாக்குகள் ஆயிரம் கேட்டும்,
அடி பணியாதார் பேணாதார்.
பெருமைகள் நமக்கு இறையே தருவார்;
பிழையில் பெற்றவர் வீணாவார்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.