அடியார்!

கிறித்துவின் அடியரே!

நற்செய்தி: யோவான் 12:26.

26. ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்.

நல்வழி:

கிறித்துவின் பண்பைப் பார்த்துக்கொண்டு,

கிறித்தவராய் நாம் நடந்தோமா?

நெறிமுறை அன்பை வழியெனக்கண்டு,

நித்தம் அன்பில் நடப்போமா?

பிறிதொரு வழிமுறை சேர்க்காதென்று,

பிழைகள் விட்டுக் கடந்தோமா?

அறிவுரை சொல்லல் பிறருக்கன்று;

அதனைப் பிடித்துக் கடப்போமா?

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.