அப்பாலே போ!

அப்பாலே போ, அலகையே!

ஒருவர் ஒரு சமயத்தைக் குறித்துப் பேசுகிறார் எனில், அச்சமயத்தைக் குறித்து ஓரளவாவது தெரிந்திருக்க வேண்டும். அடிப்படைக் கருத்துகள் அறியாமல், அதைப் பின்பற்றுவோரின் பற்றினைப் புரியாமல், எடுத்தோம் கவிழ்த்தோம் என்று, பலர் பேசி இன்று, தங்கள் அறியாமையைப் பறைசாற்றுகிறார்கள். இவர்கள் நாக்கு, வாக்கிற்கும் பேசலாம், பதவிபெறும் நோக்கிற்கும், பேசலாம்.

ஆனால் அறிவுடையார் ஏற்கார்,

அவர் வரிசையில் சேர்க்கார்!

அன்று சீமோன், இன்று சீமான்! அவ்வளவுதான்.

அன்று ஆண்டவர் சொன்னதை இன்று நாமும் கூறுவோம்.

“அப்பாலே போ சாத்தானே!”

-கெர்சோம் செல்லையா.

தெரிந்தார்!

என்னையும் தெரிந்தார்!
இறை மொழி; யோவான் 15:16.

  1. நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்; நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக்கொள்வது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன்.  

இறை வழி:

முன்னிலை வாழ்க்கையை நோக்கிப் பார்த்தேன்.
முரடன் மூடன் எனத்தான் இருந்தேன்.
என்னிலை காண்கிற  இயேசுவைப் பார்த்தேன்;
இடைவெளி பெரிது, யானோ பொருந்தேன்.
அந்நிலை  அகற்றிட அழைத்ததும் பார்த்தேன்;
அவர் தெரியாவிடில் அடியனும் திருந்தேன்.
நன்னிலை என்ன? நான் இன்று பார்த்தேன்;
நற்கனி அன்பு, வருவதால் வருந்தேன்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.