அண்டிக் கொள்வோம்!

அண்டிக் கொள்வோம் சிலுவையிலே!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 23: 48-49.  

கிறித்துவில் வாழ்வு:  
தொண்டர் துடித்தார் தொலைவினிலே. 
 துயரைத் தாங்கும் வலுவிலையே. 
பெண்டிர் வடித்தார் ஏங்கலிலே. 
பெருகும் கண்ணீர் தேங்கலையே.   
கண்டோர் அடித்தார் மார்பினிலே.  
காணா மக்கள் சார்பினிலே.         
அண்டிக் கொள்வீர் சிலுவையிலே. 

அருள் மாமழை பொழிகையிலே!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.