எப்படி நடக்கும்?

எப்படி நடக்கும்?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 1:18-20.
18 அப்பொழுது சகரியா தேவதூதனை நோக்கி: இதை நான் எதினால் அறிவேன்; நான் கிழவனாயிருக்கிறேன், என் மனைவியும் வயதுசென்றவளாயிருக்கிறாளே என்றான்.
19 தேவதூதன் அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் தேவசந்நிதானத்தில் நிற்கிற காபிரியேல் என்பவன்; உன்னுடனே பேசவும், உனக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கவும் அனுப்பப்பட்டு வந்தேன்;
20 இதோ, தகுந்தகாலத்திலே நிறைவேறப்போகிற என் வார்த்தைகளை நீ விசுவாசியாதபடியினால் இவைகள் சம்பவிக்கும் நாள்மட்டும் நீ பேசக்கூடாமல் ஊமையாயிருப்பாய் என்றான்.
கிறித்துவில் வாழ்வு:
எப்படி நடக்கக் கூடும் என்று,
இறைவாக்கினை நாம் புறக்கணித்தோம்.
இப்படி எத்தனை பயன்களிழந்தோம்;
எண்ணிப் பார்த்து அரவணைப்போம்.
தப்பிதம் எதுவும் பற்றினில் வேண்டாம்;
தந்தை இறையை நம்பிடுவோம்.
அப்படி வரினும், அவைகள் ஒழியும்;
ஆண்டவர் வழியில் கும்பிடுவோம்!
ஆமென்.

Image may contain: cloud, text and nature