இறைவனின் மகனைப் பெற்றிடும் பேறு!

இறைவனின் மகனைப் பெற்றிடும் பேறு!
இறைவாக்கு: லூக்கா 1;26-28.
26 ஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத்தென்னும் ஊரில்,
27 தாவீதின் வம்சத்தானாகிய யோசேப்பு என்கிற நாமமுள்ள புருஷனுக்கு நியமிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிகையினிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட்டான்; அந்தக் கன்னிகையின் பேர் மரியாள்.
28 அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து: கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான்.

இறைவாழ்வு:
மறைவழி வாழும் மாண்பு கொண்டோர்,
மாநிலத்தில் இன்று அரிதாகும்.
இறைவனும் இவரில் மகனாய்ப் பிறத்தல்,
எல்லா அரிதிலும் பெரிதாகும்.
குறையுள்ள நம்மில் நிறைவாய் வாழ்ந்து,
கொடுத்து வைத்தவர் மரியாகும்.
அறைந்திடும் ஆணியாகவே சொல்வேன்,
ஆண்டவர் தேர்வே சரியாகும்!
ஆமென்.

Image may contain: one or more people, wedding, outdoor and nature