யோவான் 16: 23-24.

இறை வழி:

என்ன கேட்பேன்? எப்படிக் கேட்பேன்?
என்றறியாதே கேட்கிறேன்.
சொன்ன உம் திரு வாக்கும் பிடித்தேன்.
சொற்படி மகிழ்வே கேட்கிறேன்.
சின்ன பிள்ளை அழுவது போல் நான்,
சிணுங்கியவாறே கேட்கிறேன்.
இன்ன விருப்பம் வேறு நான் கேளேன்; 
இறையின் மகிழ்வே கேட்கிறேன்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.