பார்வை!

  1. யோவான் 10:19-21.

வாழ்வு: 


பித்தனாய் இயேசுவைப் பார்ப்பாருண்டு;

பிசாசு பிடித்ததாய் ஆர்ப்பாருண்டு.

எத்தனாய் எண்ணி இகழ்வாருண்டு;

எதிரியென்றாக்கி அகழ்வாருண்டு.

இத்தனையா என வருத்தமும் உண்டு; 


எனினும், பலரில் திருத்தமும் உண்டு.

மொத்தமாய் நோக்கின் துன்பமே உண்டு. 

முடிவோ மீட்பு, இன்பமேயுண்டு!  


ஆமென். 

-கெர்சோம் செல்லையா.