தவறுணர்த்தும் பதில்!

தவறுணர்த்தும் பதில்!

இறை மொழி: யோவான் 18:21-23.

21. நீர் என்னிடத்தில் விசாரிக்கவேண்டியதென்ன? நான் சொன்னவைகளைக் கேட்டவர்களிடத்தில் விசாரியும்; நான் பேசினவைகளை அவர்கள் அறிந்திருக்கிறார்களே என்றார்.

22. இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான்.

23. இயேசு அவனை நோக்கி: நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.

24. பின்பு அன்னா என்பவன் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்கு அவரைக் கட்டுண்டவராக அனுப்பினான்.

இறை வழி:

ஏது எதுவும் இல்லாதிருந்தும்,

ஏன் காவலர் அடித்தார்?

தீது இது; தெரியா மனிதர்,

தீமையைத்தான் பிடித்தார்.

வாது செய்யும் நோக்குடையார்,

வரிந்து கட்டத் துடிப்பார்.

தூது என்னும் இறைமகனோ,

தவறுணர்த்திக் கொடுப்பார்!

ஆமென்.

May be an image of text that says 'Jesus answered him, Iflhave spoken evil, bear witness of the evil: but if well, why smitest thou me? John 18:23 KJV'