ஒளிவு மறைவில்லை!

ஒளிவு மறைவில்லை!

இறை மொழி: யோவான் 18: 19-21.

19. பிரதான ஆசாரியன் இயேசுவினிடத்தில் அவருடைய சீஷரைக்குறித்தும் போதகத்தைக்குறித்தும் விசாரித்தான்.

20. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் வெளியரங்கமாய் உலகத்துடனே பேசினேன்; ஜெபஆலயங்களிலேயும் யூதர்களெல்லாரும் கூடிவருகிற தேவாலயத்திலேயும் எப்பொழுதும் உபதேசித்தேன்; அந்தரங்கத்திலே நான் ஒன்றும் பேசவில்லை.

21. நீர் என்னிடத்தில் விசாரிக்கவேண்டியதென்ன? நான் சொன்னவைகளைக் கேட்டவர்களிடத்தில் விசாரியும்; நான் பேசினவைகளை அவர்கள் அறிந்திருக்கிறார்களே என்றார்.

இறை வழி:

தெளிவு தேடும் என் நாட்டாரே,

தெய்வ வாக்கு கேளுங்கள்.

ஒளிவு மறைவு ஒன்றும் இல்லை;

உளம் திறந்து கேளுங்கள்.

பொழிவு நாடும் என் வீட்டாரே,

பொய்மை விட்டு வாழுங்கள்.

அழிவு கண்டு அழுபவர் உண்டு,

அன்பில் மீட்டு வாழுங்கள்!

ஆமென்.

May be an image of text that says 'There is no hidden agenda in my life. I want a good life with good deeds. -Venkatesh SR SR Your uote.in'