இயேசுவே மாதிரி!

இயேசுவே மாதிரி!

இறை மொழி: யோவான் 15:17-19.

  1. நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்றே இவைகளை உங்களுக்குக் கற்பிக்கிறேன்.
  2. உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள்.
  3. நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது.

இறை வழி:

கல்லடி படுகிற மா மரம் காண்போம்;
கவலை போகக் கற்றிடுவோம்.
சொல்லடி கேட்டு, துவண்டது போதும்.
சொல்பவர் உறவே, பற்றிடுவோம்.
வில்லடி வீரர் வீழ்வதும் காண்போம்;
வெறியும் வெறுப்பும் அற்றிடுவோம்.
நல்லடியாருக்கு மாதிரியாகும்
நம்மிறை அன்பே, பெற்றிடுவோம்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.