போதாது! போதாது!
இறை மொழி: யோவான் 21:25.
25. இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு; அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன். ஆமென்
இறைமகன் செய்த அருஞ்செயல் கண்டு,
எழுதிய நூல்கள் போதாது.
குறைவற அவற்றின் விளக்கம் கொண்டு
கொடுத்த தாள்கள் போதாது.
மறைநூல் கற்கும் மகிழ்வில் நின்று,
மாட்சி சொல்வரும் போதாது.
நிறைவின் வாழ்வு இறைதானென்று,
நேர்வழி செல்வரும் போதாது!
ஆமென்.
எழுதி வழங்கியவர்: கெர்சோம் செல்லையா. சென்னை-99.
![May be an image of 1 person and beard](https://scontent.fmaa3-2.fna.fbcdn.net/v/t39.30808-6/418725705_7265289543501785_2137333161267277513_n.jpg?stp=dst-jpg_p180x540&_nc_cat=107&ccb=1-7&_nc_sid=3635dc&_nc_ohc=p5yJDJvUyR8AX-n4BJ3&_nc_ht=scontent.fmaa3-2.fna&oh=00_AfAHJkFh0QybBcrpK-ePbfaB5gGvdTwNq2t7nN47fqnr5g&oe=65A0C6AC)