இறைவாக்கு

சூது நிறைந்த உலகினிலே,
சொரியும் கண்ணீர் வாழ்வினிலே,
தூது கேட்போம், துயர் நீங்கும்.
தூயவர் வாக்கே நமை மீட்கும்!
நல்வாழ்த்து:
படையோ பணமோ செல்லாது.
படைத்தவர் முன்னே நில்லாது.
கடவுளை மட்டும் நாடிடுவாய்;
காப்பார், அவரைப் பாடிடுவாய்!
நல்வாக்கு: மத்தேயு 25:24-25.
“ஒரு தாலந்தைப் பெற்றுக் கொண்டவரும் அவரையணுகி, ‘ ஐயா, நீர் கடின உள்ளத்தினர்; நீர் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவர்; நீர் தூவாத இடத்திலும் விளைச்சலைச் சேகரிப்பவர் என்பதை அறிவேன். உமக்கு அஞ்சியதால் நான் போய் உம்முடைய தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன். இதோ, பாரும், உம்முடையது ‘ என்றார்.”

நல்வாழ்வு:

பண்பாய் வாழ்ந்து பணி செய்ய
படைத்தவர் ஈவு அளிக்கின்றார்.
நண்பன் போன்று கை பிடித்து
நன்மை மட்டும் அளக்கின்றார்.
எண்ண மறந்த தன்னலத்தார்
ஈவைப் புதைத்து, பழிக்கின்றார்.
வெண்ணை போதும் நெய் எடுக்க;
விண்ணின் விருப்பில் மகிழப்பார்!
ஆமென்.

Leave a Reply