இன்றைய நற்செய்தி

நல்வாழ்த்து:
இறைவனின் பிள்ளையே வாழ்த்துகிறேன்;
இயேசுவின் பெயரில் வாழ்த்துகிறேன்;
கறைகள் போக்கும் திருவாக்கால்
கழுவப்படவே வாழ்த்துகிறேன்!

நல்வாக்கு:
மத்தேயு 25: 26-28.
“அதற்கு அவருடைய தலைவர், ‘ சோம்பேறியே! பொல்லாத பணியாளனே, நான் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவன். நான் தூவாத இடத்திலும் போய் சேகரிப்பவன் என்பது உனக்குத் தெரிந்திருந்தது அல்லவா? அப்படியானால் என் பணத்தை நீ வட்டிக் கடையில் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நான் வரும்போது எனக்கு வரவேண்டியதை வட்டியோடு திரும்பப் பெற்றிருப்பேன் ‘ என்று கூறினார். ‘ எனவே அந்தத் தாலந்தை அவனிடமிருந்து எடுத்துப் பத்துத் தாலந்து உடையவரிடம் கொடுங்கள்.”

நல்வாழ்வு:
கொடுக்கும் இறையே கூடக் கொடுப்பார்;
கொடியவர் கெடுக்க விடாது தடுப்பார்.
எடுக்கும் நாமும் ஏய்ப்பதை விடுவோம்;
இயேசு தருவதில் இன்பம் அடைவோம்!
ஆமென்.

Leave a Reply