தூது

தூய்மையாக வாழ விரும்பின்,
தூது கேட்பீர் நண்பர்களே.
வாய்மையான தெய்வ வாக்கால்,
வாழ்வில் மாற்றம் காணுங்களே!
நல்வாழ்த்து:
உள்ளிருக்கும் இறையே போற்றி;
ஊக்குவிக்கும் மைந்தா போற்றி.
கள்ளமில்லா ஆவியர் போற்றி;
கழுவ வேண்டிக் கேட்டேன், போற்றி!

நல்வாக்கு:

மத்தேயு 25:22-23.
“இரண்டு தாலந்து பெற்றவரும் அவரை அணுகி, ‘ ஐயா நீர் என்னிடம் இரண்டு தாலந்து ஒப்படைத்தீர். இதோ பாரும், வேறு இரண்டு தாலந்து ஈட்டியுள்ளேன் ‘ என்றார். அவருடைய தலைவர் அவரிடம், ‘ நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்குகொள்ளும் ‘ என்றார்”
நல்வாழ்வு:
இரண்டோ மூன்றோ எதுவோ,
இறைவன்  தருவது என்போம்.
முரண்டு பிடிக்கும் உலகம்
மீள்வதர்க்கென்று அறிவோம்.
வறண்ட வாழ்வை மாற்றும்
வருவாய்க்காகச் செய்யோம்.
உறங்கி விழுந்தத் தமிழர்
உணர்ந் தெழும்பச் செய்வோம்!
ஆமென்.

Leave a Reply