அன்பே இறைவன்!
கொல்லவும், அழிக்கவும் ஒருவன் வந்தால்,
கோனாய், இறையாய்ப் பாராதீர்.
வெல்லவும், வீழ்த்தவும், சூது புனைந்தால்,
விரும்பும் அறமாய்க் கூறாதீர்.
சொல்லவும் செய்யவும் பழியும் தந்தால்,
சொல்கிற அவன்பின் சேராதீர்.
எல்லையும், முடிவும் இல்லான் ஒருவன்;
இவனன்பு விட்டு மாறாதீர்!
-செல்லையா.