தாழ்மை!

தாழ்மை!
நற்செய்தி : யோவான் 3:30.

நல்வழி:
வண்டு சுவைத்து, பறக்கின்ற

வாழ்வும், வழியும் கேளேன்.
உண்டு மகிழ்ந்து, மறக்கின்ற
உயர்வும், உலகும் கேளேன்.
தண்டு வடத்தை அறுக்கின்ற,
தலையும், கையும் கேளேன்.
தொண்டு திறந்து பிறக்கின்ற,

தூயன் அடியே கேட்பேன். 
ஆமென்.

-செல்லையா.

Leave a Reply