ஒளிநாள் வாழ்த்து!

ஒளிநாள் வாழ்த்து!  

வெடித்துக் குப்பை போடுவதாலே
வீதியில் மாசு கூடிடுமே.
வெளிச்சம் வீசும் விளக்கினாலே,  
வேண்டா இருளும் ஓடிடுமே.  
பிடித்துக் கொள்ளும் அறிவினாலே,  
பிறர்க்கு நன்மை செய்திடுமே.    
பேச்சில், செயலில் ஒளிவந்தாலே,  
பெரிய இன்பம், எய்திடுமே!


-செல்லையா,
இறையன்பு இல்லம்,  
24, செக்ரெட்டேரியட் காலனி,  
சென்னை-600099.

Leave a Reply