தாவிது பாடிய இறைவன்!
கிறித்துவின் வாக்கு: 20: 41-44.
41 அவர் அவர்களை நோக்கி: கிறிஸ்து தாவீதின் குமாரனென்று எப்படிச் சொல்லுகிறார்கள்?
42 நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று,
43 கர்த்தர் என் ஆண்டவருடனே சொன்னார் என்று தாவீது தானே சங்கீத புஸ்தகத்தில் சொல்லுகிறானே.
44 தாவீது அவரை ஆண்டவரென்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார்.
கிறித்துவில் வாழ்வு:
முப்புறப் பண்பின் முழுமையே இறைவன்;
மூன்றல்ல ஒன்றே, மும்மை இறைவன்.
எப்புறம் தேடினும் தெரிவார் இறைவன்;
இயேசுவில் காண்போம் உண்மை இறைவன்.
தப்பையும் தவற்றையும் அழிப்பவர் இறைவன்;
தாவிது பாடிய மேசியா இறைவன்.
இப்புவி மீளக் கேட்போம் இறைவன்;
இரங்குமினிய அன்பே இறைவன்.
ஆமென்.