இருக்கின்றார்!

இருக்கின்றார்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 20: 37-40.  

37  அன்றியும் மரித்தோர் எழுந்திருப்பார்களென்பதை மோசேயும் முட்செடியைப்பற்றிய வாசகத்தில் காண்பித்திருக்கிறார். எப்படியெனில், கர்த்தரை ஆபிரகாமின் தேவனென்றும் ஈசாக்கின் தேவனென்றும் யாக்கோபின் தேவனென்றும் சொல்லியிருக்கிறார்.

38  அவர் மரித்தோரின் தேவனாயிராமல், ஜீவனுள்ளோரின் தேவனாயிருக்கிறார்; எல்லாரும் அவருக்குப் பிழைத்திருக்கிறார்களே என்றார்.

39  அப்பொழுது வேதபாரகரில் சிலர் அதைக் கேட்டு: போதகரே, நன்றாய்ச் சொன்னீர் என்றார்கள்.

40  அதன்பின்பு அவர்கள் அவரிடத்தில் வேறொன்றுங்கேட்கத் துணியவில்லை.  

கிறித்துவில் வாழ்வு:  

இருப்பவர் இறப்பவராகிடினும்,  

எங்கோ மறைவில் இருக்கின்றார். 

நெருப்புடன் முடித்தவராகிடினும்,   

நெஞ்சின் திரையில் இருக்கின்றார். 

விருப்புடன் இயேசுவைப் பணிந்தவரோ,  

விண்ணில் இறையுள் இருக்கின்றார்.  

மறுத்து,வெறுத்து, மடிந்தவரோ, 

மறுபடி இறக்கவே இருக்கின்றார்!  

ஆமென்.

Leave a Reply