நம்மைப் பிடித்த பிணவாடை!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 11:43-44.
43பரிசேயரே, உங்களுக்கு ஐயோ, ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும், சந்தைகளில் வந்தனங்களையும் விரும்புகிறீர்கள்.44மாயக்காரராகிய வேதபாரகரே, பரிசேயரே, உங்களுக்கு ஐயோ, மறைந்திருக்கிற பிரேதக்குழிகளைப்போலிருக்கிறீர்கள், அவைகள்மேல் நடக்கிற மனுஷருக்கு அவைகள் தெரியாதிருக்கிறது என்றார்.
கிறித்துவில் வாழ்வு:

தம்மை உயர்வென எண்ணுதல்போல்,

தவற்றில் உயர்ந்தது வேறில்லை.

இம்மை மறுமை இவ்விரண்டில்,

இவர்க்கு உய்யும் பேறில்லை.

நம்மைப் பிடித்த பிணவாடை,

நன்றாய் அகல வேண்டிடுவோம்.

எம்மை ஆளும் இறைமகனின்,

இயல்பாம் தாழ்மை பூண்டிடுவோம்!

ஆமென்.

Leave a Reply