யாவரும் ஒன்றே!
பார்ப்பனர் செய்த பழம்பெருந் தவற்றால்,
பாழாம் சாதிகள் பிரித்தாலும்,
சேர்ப்பனராக யார் இன்றுள்ளார்?
சிதறிய குழுக்களாய்த் தானுள்ளார்.
ஆர்ப்பரிப்பவராய்ப் பிரித்தது போதும்.
அனைவர்க்கும் தந்தை இறையாமே.
ஏற்பவராகி ஒன்றாய் இணைந்தால்,
இந்தியர் வாழ்வு நிறைவாமே!
-கெர்சோம் செல்லையா.