எதுவரைக்கும் இறைவா?

எதுவரைக்கும் இறைவா?


தேன் போன்ற நற்செய்தி,

தென்னாடு தந்திடினும்,

நான் கேட்கும் நல்லாட்சி,

நமக்கில்லாக் குறையென்பேன்.

வான் வென்ற வலிமையென,

வாழ்த்து அவர் பாடிடினும்,

ஏன் என்று நான் கேளேன்;

எதுவரைக்கும் இறையென்பேன்?


-கெர்சோம் செல்லையா.

Leave a Reply