வீடு!

கிறித்துவின் வீடு!கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:57-58.

57அவர்கள் வழியிலே போகையில் ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான்.
58அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
கூடில்லாத குருவியும் இல்லை;
குழியில்லாத நரியும் இல்லை.
பாடில்லாத மனிதரும் இல்லை.
படைத்தவர்க்கிங்கு வீடும் இல்லை.
கோடிகள் கூட்டி ஆளவும் இல்லை.
கோபுரம் கட்டி வாழவும் இல்லை.
கேடில்லாது திருப்பணி செய்வேன்;
கிறித்துவின் வீடே எனது எல்லை!
ஆமென்.

Leave a Reply