கண்ணீர் துடைப்பார்!

கண்ணீர் துடைப்பார்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:37-39.
37 மறுநாளில் அவர்கள் மலையிலிருந்திறங்கினபோது, திரளான ஜனங்கள் அவருக்கு எதிர்கொண்டுவந்தார்கள்.
38 அவர்களில் ஒருவன் சத்தமிட்டு: போதகரே, என் மகனைக் கடாட்சித்தருளவேண்டுமென்று உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன், அவன் எனக்கு ஒரே பிள்ளையாயிருக்கிறான்.
39 ஒரு ஆவி அவனைப் பிடிக்கிறது, அப்பொழுது அலறுகிறான், அது அவனை நுரைதள்ள அலைக்கழித்து, அவனைக் கசக்கின பின்பும், அவனை விட்டு நீங்குவது அரிதாயிருக்கிறது.
கிறித்துவில் வாழ்வு:
பிள்ளையின் வலியைக் கண்டு கலங்காப் 
பெற்றோர் உண்டோ நம் நாட்டில்?
தள்ளி விட்டகன்றுத் தவறு செய்தாலும்,
தந்தையர் துடிப்பரே தம் வீட்டில்!
அள்ளிக்கொண்டே, அணைக்கத் தாவும், 
ஆண்டவர் செல்வரோ அவர் பாட்டில்?
கள்வனுக்கருளிய கடவுட் மைந்தன்,
கண்களைத் துடைப்பார் உம் கூட்டில்!
ஆமென்.

Leave a Reply