வேண்டாம் மழை!

விளையாட்டு பார்க்க மழை வேண்டாம்;
வீட்டில் குடிக்கவோ நீர் வேண்டும்.
தலைகாட்டும் இத்தன்னலந்தான்,
தவறெனப் புரிந்து விடவேண்டும்!
களியாட்டு, கூத்தே போதுமென்றால்,
கஞ்சியும் நீரும் ஏன் வேண்டும்?
பலியாகப் போகும் தமிழ் நாடே,
படுக்கை விட்டு நீ எழவேண்டும்!

-கெர்சோம் செல்லையா.

Leave a Reply