இறைமுன் வா நீ!
வெறியம் குடித்து விழுந்தார் கோடி;
வெறித்தனத்தாலும் இழந்தார் கோடி.
குறி தவறாகிக் குலைந்தார் கோடி;
கொள்முதல் என்றும் அலைந்தார் கோடி.
நெறிமுறை நேர்மை பேணார் கோடி;
நெஞ்சில் தூய்மை காணார் கோடி.
அறிவெது தவறெது அறியார் கோடி;
அறிய விரும்பின் இறைமுன் வா நீ!
-கெர்சோம் செல்லையா.
