கிறித்து வந்தார்!

கிறித்து வந்தார்!
நற்செய்தி மாலை: மாற்கு 14:12-16.
“புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாள் வந்தது. பாஸ்கா ஆட்டுக்குட்டியைப் பலியிடும் அந்நாளிலே இயேசுவின் சீடர், ‘ நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே சென்று ஏற்பாடு செய்ய வேண்டும் என விரும்புகிறீர்? ‘ என்று கேட்டார்கள். அவர் பின்வருமாறு கூறி, தம் சீடருள் இருவரை அனுப்பினார்: ‘ நீங்கள் புறப்பட்டு நகருக்குள் செல்லுங்கள். மண்குடத்தில் தண்ணீர் சுமந்துகொண்டு ஓர் ஆள் உங்களுக்கு எதிரே வருவார். அவர் பின்னே செல்லுங்கள். அவர் எந்த வீட்டுக்குச் செல்கிறாரோ, அந்த வீட்டின் உரிமையாளரிடம், ‘ நான் என் சீடர்களோடு பாஸ்கா விருந்து உண்பதற்கான என் அறை எங்கே? ‘ என்று போதகர் கேட்கச் சொன்னார் ‘ எனக் கூறுங்கள். அவர் மேல்மாடியில் ஒரு பெரிய அறையைக் காட்டுவார். அது தேவையான வசதிகளோடு தயார் நிலையில் இருக்கும். அங்கே நமக்கு ஏற்பாடு செய்யுங்கள். ‘ சீடர்கள் சென்று, நகரை அடைந்து, தங்களுக்கு அவர் சொல்லியவாறே அனைத்தையும் கண்டு பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.”
நற்செய்தி மலர்:
அறைகள் பற்பல கட்டி வைத்து,
அவற்றுள் செல்வம் கொட்டி வைத்து,
இறை வா இறை வா என்றழைத்தேன்;
இறை வர மறுத்தார், நிறைவில்லை!
மறைநூல் முன்பு எனைவைத்து,
மண்ணே வாழ்க்கை எனநினைத்து,
குறைகள் உணர்ந்து கூப்பிட்டேன்;
கிறித்து வந்தார், குறைவில்லை!
ஆமென்.

Image may contain: people sitting, plant, table, tree and outdoor

Leave a Reply