விளக்காய் மாறுவோம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 11:33.33 ஒருவனும் விளக்கைக் கொளுத்தி, மறைவிடத்திலாவது, மரக்காலின் கீழேயாவது வைக்காமல், உள்ளே வருகிறவர்கள் வெளிச்சம் காணும்படி, அதை விளக்குத்தண்டின்மேல் வைப்பான்.
கிறித்துவில் வாழ்வு:
எங்கும் வெளிச்சம் பரவுக என்னும்,
இறைவனை நினைவு கூருங்கள்.
இங்கும் இருளைக் கிழித்துச் செல்லும்,
எரிகிற விளக்கென மாறுங்கள்.
மங்கும் திரியைத் தூண்டிக் கொடுக்கும்,
மரத் தண்டின்மேல் சேருங்கள்.
பொங்கும் பகைவர் புரியாதிருந்தும்,
போற்றும் புதுமையும் பாருங்கள்!
ஆமென்.