கண்ணெனும் விளக்கு!

விழித்திடும் கண்ணே விளக்கு!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 11:34-36.

34கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரமுழுவதும் வெளிச்சமாயிருக்கும்; உன் கண் கெட்டதாயிருந்தால் உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும்.
35ஆகையால் உன்னிலுள்ள வெளிச்சம் இருளாகாதபடிக்கு எச்சரிக்கையாயிரு.
36உன் சரீரம் ஒருபுறத்திலும் இருளடைந்திராமல் முழுவதும் வெளிச்சமாயிருந்தால், ஒரு விளக்கு தன் பிரகாசத்தினாலே உனக்கு வெளிச்சம் கொடுக்கிறதுபோல, உன் சரீரமுழுவதும் வெளிச்சமாயிருக்கும் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
விழித்திடும் கண்ணே விளக்காகும்;
வீணாய் வைத்தால் இருளாகும்.
செழித்திடும் வாழ்விற்கு வழியாகும்;
செயல்படுத்துவதோ அருளாகும்.
பழித்திடும் கூட்டமும் பலவாகும்;
பாராதீர் அவை மருளாகும்.
கழித்திடும் இரவும் பகலாகும்;
காண்பீர் வாழ்வின் பொருளாகும்!
ஆமென்.

Leave a Reply