வாதாடும் மாந்தரெல்லாம்…
நற்செய்தி மாலை: மாற்கு 9:14-15.
“அவர்கள் மற்ற சீடரிடம் வந்தபொழுது, பெருந்திரளான மக்கள் அவர்களைச் சூழ்ந்திருப்பதையும் மறைநூல் அறிஞர் அவர்களுடன் வாதாடுவதையும் கண்டனர். மக்கள் அனைவரும் இயேசுவைக் கண்ட உடனே மிக வியப்புற்று அவரிடம் ஓடிப்போய் அவரை வாழ்த்தினர்.”
நற்செய்தி மலர்:
வாதாடும் மாந்தரெல்லாம்
வாழ்த்தித்தான் தொடங்குகிறார்.
சூதாடும் போர் மறைக்கச்
சொற்கிடங்காய் மடங்குகிறார்.
தீதாடும் நிலை உணரார்,
தேய்ந்தோட மயங்குகிறார்.
தூதோடு வாழ்பவர்தான்,
தெய்வத்தால் இயங்குகிறார்!
ஆமென்.
![Image may contain: drawing](https://scontent.fdel1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13626538_1171400416224092_14732628276452440_n.jpg?oh=20ed202fdd425ab82055b8374dce92d6&oe=58490573)