வாக்கு வடிவெடுத்தது!

வாக்கு வடிவம் எடுத்தது!
நற்செய்தி: யோவான் 1:14.
14. அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
நல்வழி:

வாக்காய் ஒலித்து வழிநடத்தியயென்
வானின் அருளே, வாய்மையே,
நோக்காதிருந்த மாந்தர் கண்முன்
நுழைந்தாய் இயேசு வடிவிலே.
நீக்காதிருப்போர் ஐயம் இனியேன்?
நீங்கச் செய்வாய் மாண்பிலே.
தேக்காதிருந்த மாட்சியை அடியேன்,
தேடினேன் உனது மடியிலே!
ஆமென்.
-செல்லையா.

Leave a Reply