வறியரை நினைப்பீர்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 6:24-26.
24 ஐசுவரியவான்களாகிய உங்களுக்கு ஐயோ; உங்கள் ஆறுதலை நீங்கள் அடைந்து தீர்ந்தது.
25 திருப்தியுள்ளவர்களாயிருக்கிற உங்களுக்கு ஐயோ; பசியாயிருப்பீர்கள். இப்பொழுது நகைக்கிற உங்களுக்கு ஐயோ; இனி துக்கப்பட்டு அழுவீர்கள்.
26 எல்லா மனுஷரும் உங்களைக்குறித்துப் புகழ்ச்சியாய்ப் பேசும்போது உங்களுக்கு ஐயோ; அவர்கள் பிதாக்கள் கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள்.
கிறித்துவில் வாழ்வு:
நான்கு செல்வர் வளர்ச்சியிலே,
நாடே வளரும் என்போரே,
ஏங்குமெளியர் வாழ்க்கையிலே,
எவைகள் தேவை அறிவீரா?
தூங்குகின்றார் என நினைத்துத்
தூசாய் அவரைப் புறக்கணிப்பின்,
தாங்குமிறையின் திருவாக்கு,
தட்டிக் கேட்கும், தெரிவீரே!
ஆமென்.
![No automatic alt text available.](https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-0/p526x296/46170102_2083889538308504_8552029946539671552_n.jpg?_nc_cat=107&_nc_eui2=AeHba9I6-LI7tHZTZOhdWJtVEWaFQZc1vrmz5VE7pMmEhDnKK6fjprAL7T8Y1JUI3IZEHGKfvF-PQYNwjCwL3BiNnXky6J1mFEzVJysQD6IbHg&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=e8c926e50ee4b1e80df6ea12d3ad85bf&oe=5C731191)