வீடு பேற்றைத் தெரிவோம்!

வீடு பேற்றைத் தெரிவோம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 6:22-23.

22 மனுஷகுமாரன் நிமித்தமாக ஜனங்கள் உங்களைப் பகைத்து, உங்களைப் புறம்பாக்கி, உங்களை நிந்தித்து, உங்கள் நாமத்தைப் பொல்லாததென்று தள்ளிவிடும்போது நீங்கள் பாக்கியவான்களாயிருப்பீர்கள்.
23 அந்நாளிலே நீங்கள் சந்தோஷப்பட்டுக் களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; அவர்களுடைய பிதாக்கள் தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
திட்டுவோரைத் திருப்பித் திட்டின்,
தீமை அன்று என்போரே,
வெட்டுவோரை வெட்டிப் போட்டால்,
வெறியும் சரிதான், என்பீரா?
கொட்டும் ஒருவர் சினத்தினாலே,
குடும்பம் தொலையும், புரிவீரா?
விட்டு விட்டுப் பொறுமை கொள்ளும்;
வீடு பேற்றைத் தெரிவீரா?
ஆமென்.

Image may contain: flower, plant, text and nature

Leave a Reply