யாவரும் வாழவே இறை படைத்தார்!
நலமாய் யாவரும் வாழத்தான்,
நமக்குப் புவியை இறை படைத்தார்.
தலையில் மூளையை வைத்துத்தான்,
தகுந்த வடிவில் உடல் கொடுத்தார்.
பலரையும் வாழ வைக்கத்தான்,
பற்பல அரசையும் தேர்ந்தெடுத்தார்.
சிலரை மட்டும் இவர் வளர்த்துச்
சீர்மிகு நாட்டை ஏன் கெடுத்தார்?
-கெர்சோம் செல்லையா.