வெறுந்தலையே!

கண்ணில் கயமை கண்டபின்னும்,
கட்டுப் படுத்த விரும்பலையே!
உண்மை நம்மைக் கேட்கும் என்னும்,
உணர்வும் நெஞ்சில் அரும்பலையே!
பன்மை மிகுந்த பாரத நாட்டின்
பண்பைப் பார்த்தும் திருந்தலையே.
என்னால் எழுத மட்டுமே முடியும்;
ஏற்க மறுப்பின் வெறுந்தலையே!

-கெர்சோம் செல்லையா.

Leave a Reply