மேன்மை காண, தாழ்மை பார்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 22: 24-27.
24 அன்றியும் தங்களில் எவன் பெரியவனாயிருப்பான் என்று அவர்களுக்குள்ளே வாக்குவாதம் உண்டாயிற்று.
25 அவர் அவர்களை நோக்கி: புறஜாதியாரின் ராஜாக்கள் அவர்களை ஆளுகிறார்கள்; அவர்கள்மேல் அதிகாரம் செலுத்துகிறவர்களும் உபகாரிகள் என்னப்படுகிறார்கள்.
26 உங்களுக்குள்ளே அப்படியிருக்கக்கூடாது; உங்களில் பெரியவன் சிறியவனைப்போலவும், தலைவன் பணிவிடைக்காரனைப்போலவும் இருக்கக்கடவன்.
27 பந்தியிருக்கிறவனோ, பணிவிடைசெய்கிறவனோ, எவன் பெரியவன்? பந்தியிருக்கிறவன் அல்லவா? அப்படியிருந்தும், நான் உங்கள் நடுவிலே பணிவிடைக்காரனைப்போல் இருக்கிறேன்.
கிறித்துவில் வாழ்வு:
எப்படி பெரியோர் ஆவது என்று,
யாவரும் இங்கு ஏங்குகிறார்;
தப்பித வழிமுறை எடுத்துக்கொண்டு,
தலைவர் கனவில் தூங்குகிறார்.
இப்படி நாட்டோர் இருக்கும்போது,
இயேசு போன்று வாழ்வோர் யார்?
முப்படி அவரே அளக்கிறார், நம்பு;
மேன்மை காண, தாழ்மை பார்!
ஆமென்.
-செல்லையா.