மேன்மை அடைய !

மேன்மை காண, தாழ்மை பார்!  

கிறித்துவின் வாக்கு: லூக்கா 22: 24-27.

24  அன்றியும் தங்களில் எவன் பெரியவனாயிருப்பான் என்று அவர்களுக்குள்ளே வாக்குவாதம் உண்டாயிற்று.

25  அவர் அவர்களை நோக்கி: புறஜாதியாரின் ராஜாக்கள் அவர்களை ஆளுகிறார்கள்; அவர்கள்மேல் அதிகாரம் செலுத்துகிறவர்களும் உபகாரிகள் என்னப்படுகிறார்கள்.

26  உங்களுக்குள்ளே அப்படியிருக்கக்கூடாது; உங்களில் பெரியவன் சிறியவனைப்போலவும், தலைவன் பணிவிடைக்காரனைப்போலவும் இருக்கக்கடவன்.

27  பந்தியிருக்கிறவனோ, பணிவிடைசெய்கிறவனோ, எவன் பெரியவன்? பந்தியிருக்கிறவன் அல்லவா? அப்படியிருந்தும், நான் உங்கள் நடுவிலே பணிவிடைக்காரனைப்போல் இருக்கிறேன்.  

கிறித்துவில் வாழ்வு:  

எப்படி பெரியோர் ஆவது என்று,    

யாவரும் இங்கு ஏங்குகிறார்; 

தப்பித வழிமுறை எடுத்துக்கொண்டு,   

தலைவர் கனவில் தூங்குகிறார். 

இப்படி நாட்டோர் இருக்கும்போது,  

இயேசு போன்று வாழ்வோர் யார்?   

முப்படி அவரே அளக்கிறார், நம்பு;  

மேன்மை காண, தாழ்மை பார்!  

ஆமென்.  

-செல்லையா. 

Leave a Reply