மறக்கலாமா?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 22:19-20.
19 பின்பு அவர் அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.
20 போஜனம்பண்ணினபின்பு அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் கொடுத்து: இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது என்றார்.
கிறித்துவில் வாழ்வு:
ஊனைக் கொடுத்தும் உதிரம் கொடுத்தும்,
உடன்படி செய்த இறைமகனை,
பானைச் சோறு விருந்து படைக்கும்,
பந்தியில் கூட மறந்தோமே?
தேனைப் போன்று வாழ்வு கொடுக்கும்,
தெய்வத்தினையே நாம் மறப்பின்,
பூனைக் கண்ணில் விழாமல் துடிக்கும்,
பெருச்சாளி போல் பறப்போமே!
ஆமென்.
-செல்லையா.