புளிப்பிலா வாழ்வு!

புளிப்பிலா வாழ்வு!  

கிறித்துவின் வாக்கு: லூக்கா 22:14-18.  

14  வேளைவந்தபோது, அவரும் அவருடனேகூடப் பன்னிரண்டு அப்போஸ்தலரும் பந்தியிருந்தார்கள்.

15  அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: நான் பாடுபடுகிறதற்கு முன்னே உங்களுடனேகூட இந்தப் பஸ்காவைப் புசிக்க மிகவும் ஆசையாயிருந்தேன்.

16  தேவனுடைய ராஜ்யத்திலே இது நிறைவேறுமளவும் நான் இனி இதைப் புசிப்பதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி,

17  அவர் பாத்திரத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி: நீங்கள் இதை வாங்கி, உங்களுக்குள்ளே பங்கிட்டுக் கொள்ளுங்கள்;

18  தேவனுடைய ராஜ்யம் வருமளவும் நான் திராட்சப்பழரசத்தைப் பானம்பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.  

கிறித்துவில் வாழ்வு:  

புளிப்பிலா வாழ்வைப் புவியோரடைய,   

புளியா அப்பம் இயேசுண்டார்.  

களிப்பிலா அடிமைகள் விடுதலையடைய, 

கடவுப் பண்டிகைச் சாறுண்டார். 

ஒளித்திடயியலா உண்மையை விளம்ப, 

உண்ணும் உணவைப் பகிர்ந்துண்டார்.  

விளித்திடும் அவரது குரலைக் கேட்பார்,  

விண்ணின் விருந்தில் பங்குண்பார்!  

ஆமென்.  

Leave a Reply