மன்னிப்பு!கிறித்துவின் வாக்கு: லூக்கா 17: 3.3 உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். உன் சகோதரன் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தால், அவனைக் கடிந்துகொள்; அவன் மனஸ்தாபப்பட்டால், அவனுக்கு மன்னிப்பாயாக.
கிறித்துவில் வாழ்வு:
அண்ணன், தம்பி, அக்கா, தங்கை,
அன்பின் உறவில் இணைந்திருந்தும்,
மண்ணின் சொத்து பிரிக்கும்போது,
மனங்கள் ஒன்றாய் இருக்கலையே.
விண்ணின் வாழ்வே வாழ்வு என்று,
வீர முழக்கம் செய்திருந்தும்,
இன்றுவரையில் மன்னிக்கின்ற,
இளகிய நெஞ்சு பிறக்கலையே!
ஆமென்.