மன்னிப்பதுதான் கிறித்தவம்!

மன்னிப்பதுதான் கிறித்தவம்!  

கிறித்துவின் வாக்கு:  லூக்கா 22: 21-23.

21  பின்பு: இதோ, என்னைக் காட்டிக்கொடுக்கிறவனுடைய கை என்னுடனேகூடப் பந்தியிலிருக்கிறது.

22  தீர்மானிக்கப்பட்டபடியே மனுஷகுமாரன் போகிறார், ஆனாலும் அவரைக் காட்டிக்கொடுக்கிற மனுஷனுக்கு ஐயோ என்றார்.

23  அப்பொழுது அவர்கள் நம்மில் யார் அப்படிச் செய்வான் என்று தங்களுக்குள்ளே விசாரிக்கத் தொடங்கினார்கள்.  

கிறித்துவில் வாழ்வு:  

பன்னிரு அடியார் பந்தியிருந்தார்;  

பாதகன் யூதசும் உடன் இருந்தான். 

தன்னிலை அறிந்த மைந்தனோவென்றால்,  

தள்ளிவிடாது விருந்து படைத்தார்.   

என்னிலை இப்படி இருக்குமென்றால் ,  

இழிஞனுக்குணவு கொடுத்திருப்பேனா?  

மன்னியும் என்று வேண்டுவதல்ல;  

மன்னிப்பதுதான் கிறித்தவமென்றார்!  

ஆமென்.

-செல்லையா.

Leave a Reply