மகிழ்வீதலே நமது பயன்!

மகிழ்வீதலே நமது பயன்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 1:11-14.

11 அப்பொழுது கர்த்தருடைய தூதன் ஒருவன் தூபபீடத்தின் வலதுபக்கத்திலே நின்று அவனுக்குத் தரிசனமானான்.
12 சகரியா அவனைக்கண்டு கலங்கி, பயமடைந்தான்.
13 தூதன் அவனை நோக்கி: சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது; உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக.
14 உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பினிமித்தம் அநேகர் சந்தோஷப்படுவார்கள்.

கிறித்துவில் வாழ்வு:

பிறந்தபோது நம்மில் மகிழ்ந்த,
பெற்றோர் இன்று அழுவது ஏன்?
திறந்த வெளியில் திரியும் இவர்கள்,
தேடும் இல்லம் வளர்வது ஏன்?
இறந்த காலத் தவற்றை முடித்து,
இன்பம் வழங்க மறுப்பது ஏன்?
மறந்த எவரும் மகிழ்ந்ததில்லை;
மகிழ்வீதலே, நமது பயன்!
ஆமென்.

No automatic alt text available.

Leave a Reply