பொய் துறப்போம்!
எத்தனை வகையாய்ப் பொய்யுரைத்தோம்?
எவ்வாறெல்லாம் அதை மறைத்தோம்?
அத்தனை செய்தும்,நேர்மை என்றோம்.
அறவழி அறியாதே சென்றோம்.
இத்தனைத் தவறுகள் இனி தொடர்ந்தால்,
எவரும் மதியார், இதை மறந்தோம்.
பித்தராய் வாழ்வை இழக்காது,
பேரருள் பெற்றிட, பொய் துறப்போம்!
-கெர்சோம் செல்லையா.
!
![Image may contain: 1 person, text](https://fb-s-d-a.akamaihd.net/h-ak-fbx/v/t1.0-0/p370x247/24177108_1657843294246466_7193701098860605001_n.jpg?oh=103a70fccc2dec81f128a435039992c6&oe=5A949BC8&__gda__=1520307558_e9bd66feb6ca9ce3e975e22d015815a0)