பேறாகும்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 2:51-52.
51 பின்பு அவர் அவர்களுடனே கூடப்போய், நாசரேத்தூரில் சேர்ந்து, அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார். அவருடைய தாயார் இந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்துக் கொண்டாள்.
52 இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்.
கிறித்துவில் வாழ்வு:
பெற்றோருக்குப் பணிந்து நடத்தல்,
பிள்ளையின் வாழ்வில் பேறாகும்.
கற்றோர் உணர்ந்து கடைபிடிப்பின்,
காணும் இன்பம் நூறாகும்.
சுற்றும் உலகில் சேர்ந்து வாழ்தல்,
சுமையை இறக்கும் அருளாகும்.
மற்றோர் மகிழ நன்மை செய்வின்
மனித வாழ்க்கை பொருளாகும்!
ஆமென்.
![Image may contain: text](https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-0/s526x296/36726889_1899499176747542_1149203583346933760_n.jpg?_nc_cat=0&oh=2873810d9b4af1c4e166d9b9f1df594d&oe=5BE8FC88)