பாலை நிலத்தில் இறைவாக்கு!

பாலை நிலத்தில் இறைவாக்கு!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 3:1-2.
1 திபேரியுராயன் ராஜ்யபாரம் பண்ணின பதினைந்தாம் வருஷத்திலே, பொந்தியுபிலாத்து யூதேயாவுக்குத் தேசாதிபதியாயும், ஏரோது காற்பங்கு தேசமாகிய கலிலேயாவுக்கு அதிபதியாயும், அவன் சகோதரனாகிய பிலிப்பு காற்பங்கு தேசமாகிய இத்துரேயாவுக்கும் திராகொனித்தி நாட்டிற்கும் அதிபதியாயும், லிசானியா காற்பங்கு தேசமாகிய அபிலேனேக்கு அதிபதியாயும்,
2 அன்னாவும் காய்பாவும் பிரதான ஆசாரியராயும் இருந்தகாலத்தில் வனாந்தரத்திலே சகரியாவின் குமாரனாகிய யோவானுக்குத் தேவனுடைய வார்த்தை உண்டாயிற்று.

கிறித்துவில் வாழ்வு:
பாலை நிலத்தில் ஒலிக்குதய்யா;
படைத்தோன் வாக்கு பலிக்குதய்யா.
மாலைப் பொழுது நெருங்குதய்யா;
மகிழ்வும் மறைய விரும்புதய்யா.
நூலைப் போன்று உடையிருக்கும்;
நுண்மதி கொண்டு எண்ணுமய்யா;
வேலைக் கேற்ப விளைவிருக்கும்;
விண்ணின் விருப்பைப் பண்ணுமய்யா!
ஆமென்.

Leave a Reply