பேரிடர் நாள்!

பேரிடர் நாளில்!  

கிறித்துவின் வாக்கு:  லூக்கா 21: 12-15.  

12  இவைகளெல்லாம் நடப்பதற்கு முன்னே என் நாமத்தினிமித்தம், அவர்கள் உங்களைப் பிடித்து, ஜெப ஆலயங்களுக்கும் சிறைச்சாலைகளுக்கும் ஒப்புக்கொடுத்து, ராஜாக்கள் முன்பாகவும் அதிபதிகள் முன்பாகவும் உங்களை இழுத்துத் துன்பப்படுத்துவார்கள்.

13  ஆனாலும் அது உங்களுக்குச் சாட்சியாவதற்கு ஏதுவாயிருக்கும்.

14  ஆகையால் என்ன உத்தரவு சொல்லுவோமென்று கவலைப்படாதிருக்கும்படி உங்கள் மனதிலே நிர்ணயம்பண்ணிக்கொள்ளுங்கள்.

15  உங்களை விரோதிக்கிறவர்கள் ஒருவரும் எதிர்பேசவும் எதிர்நிற்கவும் கூடாத வாக்கையும் ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுப்பேன்.  

கிறித்துவில் வாழ்வு:  

வாசித்துணர்ந்து ஆய்பவராயினும்,  

வருந்தும் நாளில் கலங்கிடுவார்.  

நேசித்திணைக்கும் இயேசுவையேற்பின்,  

நித்தமும் மறையால் துலங்கிடுவார்.  

பேசித்தீர்க்கும் அறிவும் வாக்கும், 

பேரிடர் நாளில் இறை தருவார்.   

தூசிக்கிணையாய்த் துயரும் பறக்கும்;  

தூதர் சூழ அவர் வருவார்!  

ஆமென்.

Leave a Reply