பித்தர் என்று மனிதர் நினைப்பார்!

பித்தர் என்று மனிதர் நினைப்பார்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 4:5-8.
5 பின்பு பிசாசு அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்து:
6 இவைகள் எல்லாவற்றின்மேலுமுள்ள அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன், இவைகள் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுக்கிறேன்.
7 நீர் என்னைப் பணிந்துகொண்டால் எல்லாம் உம்முடையதாகும் என்று சொன்னான்.
8 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்குப் பின்னாகப்போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
பத்து கொடுத்தால் முடியாதென்பார்;
பதினாயிரமெனில் அடிமையாவார்.
சித்துவிளையாடும் அரசியல் அறிஞர்,
சிறுமையிலேதான் கிடக்கின்றாரே!
மொத்தமாகவே அலகை கொடுத்தும்,
முடியாதென்றார் இறையின் மைந்தர்.
பித்தர் என்று மனிதர் நினைப்பார்.
புனிதரோ, நேர்வழி நடக்கின்றாரே!
ஆமென்.

Leave a Reply