பாறையாம் கிறித்து!
பாறையின்மேலே, விழுந்ததனாலே,
பாவியர் நொறுங்கி ஓய்ந்திட்டார்.
கூரையைப்போலே, பாறைகல் விழவே,
கொடியர் நசுங்கி மாய்ந்திட்டார்!
தேரையாய் அடியர் தெரியாமலேயே,
தெய்வப் பாறையுள் வாழ்ந்திட்டார்.
நீரையும் வழங்கி, நிலைவாழ்வளித்தார்;
நினையாரேதான் தாழ்ந்திட்டார்!
-கெர்சோம் செல்லையா.
![Image may contain: text](https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/52778824_2225205977510192_4710700596741537792_n.jpg?_nc_cat=101&_nc_oc=AQmFn581n_DrVu2AqAo0lfemd4VUdO3iMCEXAA5snL2wy-jtallEJGwjdxQnFu_G2VU&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=e12b524e55919c693f48daea1904ffd5&oe=5CEFAC27)