யார் நம் உறவு?

யார் நம் உறவு?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 8:19-21.
19 அப்பொழுது அவருடைய தாயாரும் சகோதரரும் அவரிடத்தில் வந்தார்கள்; ஜனக்கூட்டத்தினாலே அவரண்டையில் அவர்கள் சேரக்கூடாதிருந்தது.
20 அப்பொழுது: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் உம்மைப் பார்க்கவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்று அவருக்கு அறிவித்தார்கள்.
21 அதற்கு அவர்: தேவனுடைய வசனத்தைக் கேட்டு, அதின்படி செய்கிறவர்களே எனக்குத் தாயும் எனக்குச் சகோதரருமாயிருக்கிறார்கள் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
யார் நம்மோடு இருப்பார் என்றால்,
அண்ணன் தம்பியர் வருவதில்லை.
ஊர் பண்பாடும் உறவின் உயர்வாம்
அன்னையும் உதவி தருவதில்லை.
பார் படைத்தவரின் பணியினில் சேர,
பலருக்கு இன்று எண்ணமில்லை.
சீர் மிகு செய்தியாய் வாழ்வார் உறவே
சிறந்தது, வேறு மண்ணிலில்லை!
ஆமென்.

No photo description available.

Leave a Reply